பெண்களே அவதானம்: மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கூட ஆபத்து!!

You are currently viewing பெண்களே அவதானம்: மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கூட ஆபத்து!!

மக்கள் நடமாட்டம் அதிகமான கல்வியங்காடு பகுதியில் பேருந்தக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கிலி கள்ளா்களால் அறுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. பருத்துறை வீதியில் உள்ள கல்வியங்காடு பகுதி யில் இலங்கநாயகி அம்மன் ஆலயம் முன்பாக உள்ள பேருந்து தாிப்பிடத்தில்

பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலியே அறுத்து செல்லப்பட்டுள்ளது. மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரே சங்கிலியை அறுத்துள்ளனா்.

சம்பவம் தொடா்பாக கோப்பாய் காவல்த்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கு ம் நிலையில், சம்பவத்துடன் தொடா்புபட்ட கள்ளா்கள், கடந்த இரு மாதங்களுக்கு முன்னா் கல்வியங்காடு செங்குந்தா பாடசாலை வீதிக்கு முன்னால் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் என சிறிலங்கா காவல்த்துறையினர் கூறகின்றனா்.

அண்மைக்காலமாக வழிப்பறிக் கொள்ளை பரவலாக எல்லா இடங்களிலும் இளைஞர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதால் பெண்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெண்கள் நகையணிந்து தனிமையில் பயணிக்க வேண்டாமென தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள