பேச்சுவார்த்தைகளைக் குழப்பி இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களே ராஜபக்ஷக்கள்!

You are currently viewing பேச்சுவார்த்தைகளைக் குழப்பி இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களே ராஜபக்ஷக்கள்!

பேச்சுவார்த்தைகளைக் குழப்பி பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களே ராஜபக்ஷக்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. குற்றம்சாட்டினார்.

இறுதிப் போரின் நிறைவில் வெள்ளைக்கொடியுடன் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளைச் சுட்டுக்கொன்றவர்களும் ராஜபக்ஷக்கள்தான் என்றும் அவர் சாடினார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலானது இலங்கையில் ஒரு தேசிய பாதுகாப்புப் பிரச்சினையைத் தோற்றுவித்திருந்தது. கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வரும் நோக்கில் ராஜபக்ஷ குடும்பமே இவ்வாறானதொரு பிரச்சினையை உருவாக்கியுள்ளது எனத் தற்போது அம்பலமாகியுள்ளது.” – என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments