பொங்கல் விழாவை நடத்திவிட்டோம் என்ற மமதையில் தமிழர்கள் தப்புக்கணக்குப் போடக் கூடாது!

You are currently viewing பொங்கல் விழாவை நடத்திவிட்டோம் என்ற மமதையில் தமிழர்கள் தப்புக்கணக்குப் போடக் கூடாது!

குருந்தூர்மலையில் பொங்கல் விழாவை நடத்திவிட்டோம் என்ற மமதையில் தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் கருத்து வெளியிடுகின்றனர். பொங்கல் விழாவை நடத்தியமைக்காகக் குருந்தூர்மலை தமிழர்களின் சொத்து என்று அவர்கள் தப்புக் கணக்குப் போடக்கூடாது என தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளான சரத் வீரசேகர, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகிய எம்.பிக்கள். கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் நடைபெற்ற பொங்கல் வழிபாடே தமிழர்களின் இறுதி பூசையாக இருக்க வேண்டும் என குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குருந்தூர் மலையை ஒருபோதும் தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

” முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. எனினும் இதனை நாம் தவறான தீர்மானமாகவே கருதுகிறோம். சம்பிரதாய ரீதியான இந்து மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள்.

வடக்கு மாணத்தில் சிங்கள மக்கள் வாழ்வதை விரும்பாத தரப்பினர் விகாரையின் கட்டுமானப்பணிகளை எதிர்த்தனர். இவ்வாறான இனவாதத்தை தூண்டும் தரப்பினரே இன்று பொங்கல் வழிபாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் நாம் இதற்கு இடையூறு விளைவிக்காதிருந்தோம். எனினும், இங்கு நடைபெறும் இறுதி பூசையாக அல்லது நிகழ்வாக இது இருக்க வேண்டும்.

குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புக்களையும் சவாலுக்குட்படுத்தி நாம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளோம். இந்த பிரச்சனையை மேன்முறையீட்டு நீதிமன்றில் தீர்த்துக் கொள்ள நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.

இந்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

இது இலங்கையின் சொத்து. இதன் உண்மையான உரிமையாளர்கள் பௌத்தர்களே. இவற்றை பாதுகாக்கவும் இதன் பயனை பெற்றுக் கொள்ளவும் அனைவருக்கும் உரிமையுண்டு. எனினும், இது பௌத்தர்களுக்கானது. அந்த உரிமையை எவராலும் பறிக்க முடியாது.” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று

குருந்தூர்மலை விவகாரத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைந்து தீர்வு காண வேண்டும். இல்லையேல் அங்கு பௌத்தர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வன்முறைதான் வெடிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.

குருந்தூர்மலை விகாரைக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு தமிழர்கள் புகுந்து சண்டித்தனம் காட்டுவதை ஏற்க முடியாது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பௌத்த மதத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும். மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அவர் செயற்பட வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளின் சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஜனாதிபதி முக்கியவத்துவம் வழங்கக்கூடாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments