பொருளாதார நெருக்கடி காரணமாக ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!!

You are currently viewing பொருளாதார நெருக்கடி காரணமாக ஐவர்  தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கிளிநொச்சி – நச்சிகுடா கடற்கரையில் இருந்து நேற்று காலை சட்டவிரோதமாக படகில் புறப்பட்டுச் சென்று இன்று அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரைக்கு வந்தனர்.

அவர்களை மரைன் காவற்துறையினர் மண்டபம் காவற்துறை நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments