மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரண பணிகள் !

You are currently viewing மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரண பணிகள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா அச்சுறுத்தல்கள் காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்து மிகவும் கஸ்ட நிலையில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

m

நேற்று  வியாழக்கிழமை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பின் நிதி உதவி ஊடாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈரளகுளம் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண்கள் தலைமை தாங்கும் 32 குடும்பங்களுக்கான 2000 ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.

m

உதவி வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் பு.சசிகரன் மற்றும் ஊடகவியலாளர்களான கு.சுபோஜன், ந.நித்தியானந்தன், சு.குணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.

m

உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் நிதி உதவி வழங்கிய வல்வை 21 நண்பர்கள் அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

m
m
பகிர்ந்துகொள்ள