மத்தியதரைக் கடலில் 67 புலம்பெயர்ந்தோருடன் படகைக் காணவில்லை!

  • Post author:
You are currently viewing மத்தியதரைக் கடலில் 67 புலம்பெயர்ந்தோருடன் படகைக்  காணவில்லை!

மத்தியதரைக் கடலில் ஒரு ரப்பர் படகு காணாமல் போனதை அடுத்து, 119 புலம்பெயர்ந்தோரை மீட்டதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், மேலும் இன்னும் 67 பேரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் .

படகில் வந்த புலம்பெயர்ந்தோர் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குச் சென்று கொண்டிருந்திருக்கலாம் எனவும் மீட்புப் பணிகள் இரவு நிறுத்தப்பட்டு இன்று செவ்வாய் காலை மீண்டும் தேடலைத் தொடங்கினர் என்று ஸ்பெயினின் மீட்பு அமைப்பின் பெயரிடப்படாத செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். (NTB)

பகிர்ந்துகொள்ள