மன்னாரில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இராணுவ சிப்பாய்!

You are currently viewing மன்னாரில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இராணுவ சிப்பாய்!

breaking

மன்னாரில் கமாண்டோ சிப்பாய் ஒருவர் இரு கால்களிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் – அடம்பன் இராணுவ கமாண்டோ பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றும் கமாண்டோ ஒருவரே இவ்வாறு நேற்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது இரண்டு கால்களிலும் எவ்வாறு துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது என்ற விபரங்களை அறிய அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தின் கமாண்டோ சிப்பாய் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த திலகரத்ன என்பவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments