மன்னாரில் பொலிஸாருக்கு எதிராக குடும்பம் ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

You are currently viewing மன்னாரில் பொலிஸாருக்கு எதிராக குடும்பம் ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

மன்னார் குருவில்,வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று அடம்பன் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் சிறீலங்கா காவற்துறையினர் தொடர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 1 ஆம் திகதி(1/12/2023) மாலை 6 மணியளவில் அடம்பன் சிறீலங்கா பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிறீலங்கா காவற்துறையினர் 3 பேர் சிவில் உடையில் எனது வீட்டுக்கு வந்து கணவரை கேட்டு விட்டு வீடு மற்றும் வீட்டுச் சூழலை முழுமையாக சோதனை செய்தனர்.

தொடர்ந்தும் எனது கணவரை எங்களிடம் கேட்டு தகாத வார்த்தைகளினால் எங்களை பேசி அச்சுரூத்தியதோடு பின்னர் அவரது மகனை பார்த்து உனது பாக்கெட்டில் கஞ்சாவை வைத்து உன்னை கைது செய்து 14 நாள் சிறையில் வைப்போம் என மிரட்டி னர்.

அதனைத் தொடர்ந்து வீட்டை விட்டுச் சென்றனர். மீண்டும் 2 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் எனது கணவர் தோட்ட வேலை செய்து முடித்து விட்டு மாடு கட்டுவதற்கு சென்றிருந்தார்.

அப்போது சிறீலங்கா காவற்துறையினர் கூறிக்கொண்டு சிவில் உடையில் வீட்டுக்கு வந்தவர்கள் கணவரையும்,மகனையும் தகாத வார்த்தைகளால் பேசி கைது செய்யப் போவதாக கூறினார்கள்.

அதற்கு அவர்களிடம் நான் கேட்டேன் அவர்கள் என்ற குற்றம் செய்தார்கள் என்று?.இதன் போது எனது கணவரும் வீட்டுக்கு வந்தார்.அதன் போது எனது கணவரை பிடித்து கைவிலங்கு போட எத்தனித்தனர்.

பின்னர் துப்பாக்கியை எடுத்து எங்களை நோக்கி சுட்டனர்.எனினும் நாங்கள் மயிரிழையில் தப்பினோம்.குறித்த சிறீலங்கா காவற்துறையினர் மது போதையில் காணப்பட்டனர்.பின்னர் எங்களை அச்சுறுத்தி விட்டு சென்றனர்.

3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ஆலயத்துக்குச் சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு சீறுடையுடன் 3 பொலிஸாரும்,சிவில் உடையில் 6 பேரும் சென்று வீட்டில் உள்ள உடமைகளை சேதப்படுத்தி,வீதியால் சென்றவர்களிடம் எங்களை விசாரணை செய்துள்ளனர்.

மதியம் 12.30 மணி வரை அங்கே நின்றுள்ளனர்.இதனால் நாங்கள் அச்சம் காரணமாக வீட்டிற்கு செல்லவில்லை.பாடசாலை செல்லும் பிள்ளைகள்,வேலைக்குச் செல்லும் பிள்ளைகளும் வேலைக்குச் செல்லவில்லை.

தொடர்ந்தும் அடம்பன் சிறீலங்கா காவற்துறை நிலையத்தை சேர்ந்த சிறீலங்கா காவற்துறையினர் எங்களை காரணம் இன்றி அச்சுறுத்தி வருகின்றனர்.எனவே எனது குடும்பம் பாதுகாப்புடன் வாழ ஆவணம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த மகஜரின் பிரதிகளை மன்னார் சிறீலங்கா காவற்துறை சிரேஷ்ட  அத்தியட்சகர்,மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் ஆகியவற்றிற்கும் கையளித்துள்ளனர். -குருவில் வசந்தபுரம்,வட்டக்கண்டல் என்ற முகவரியை சேர்ந்த ய.சகாயராணி என்ற நான்கு பிள்ளைகளின் தாய் இவ்வாறு மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments