மன்னார் பகுதியை சேர்ந்த உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் சடலமாக மீட்ப்பு!

You are currently viewing மன்னார் பகுதியை சேர்ந்த உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் சடலமாக மீட்ப்பு!

மன்னார் மாவட்டத்தின் பெரும் அடையாளங்களில் ஒன்றித்த டக்ஸன் பியூஸ்லஸ்  உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான இவர் மாலைதீவில் சடலமாக மீட்கப்படுள்ளார்,

இம்மரணம் தற்கொலையாக கூறப்படும் நிலையில் பலருக்கு டக்சனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் மேலும் உன்மையான நிலவரங்களை பொலிஸ் மற்றும் அரசாங்கம் விசாரணைகளை மேற்ள்வதூடாக நீதி கிடைக்கும் என அனைவரும் நம்புகின்றார்கள்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.

இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால் பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார். அந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இவ்வருடத்திற்க்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் ரன்னரப்பாக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments