மன்னார் பேசாலையில் வீடு வீடாக தேடுதல்!

You are currently viewing மன்னார் பேசாலையில் வீடு வீடாக தேடுதல்!

மன்னார் – பேசாலை சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் சிறீலங்கா  விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு சோதனைகளை முன்னெடுத்தனர்.

பேசாலை சிறீலங்கா காவற்துறை பிரிவில் உள்ள வீடுகளுக்குச் சென்ற  காவற்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

பிரதி சிறீலங்கா காவற்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலே பேசாலை சிறீலங்கா காவற்துறை பிரிவில் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதோடு சில போதைப்பொருட்களும் சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments