மயிலத்தமடு, மாதவனையில் அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்!

You are currently viewing மயிலத்தமடு, மாதவனையில் அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் இடம்பெறும் அத்துமீறிய காணி அபகரிப்பை கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் கால்நடை பராமரிப்பாளர்கள் பயன்படுத்தி வந்த நிலப்பகுதிகளை அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் இருந்து மயிலத்தமடுவுக்கு வருகை தந்த சிங்கள மக்கள், அத்துமீறி காணிகளை அபகரித்து விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், மட்டக்களப்பு கால்நடை பராமரிப்பாளர்களின் கால்நடைகளை தாக்கி அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மயிலத்தமடு மக்கள் வாழ்வாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அதிகூடிய கவனம் செலுத்தி, அத்துமீறிய காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என ச.கீதன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான நீதி கோரி,  50 நாட்கள் கடந்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழ் தேசிய இளைஞர் பேரவை ஆதரவு வழங்குவதாகவும், போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கை குறித்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர் ஆகியோர் சிந்திக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments