மரம் வேருடன் பாறி பேரூந்தின் மீது வீழ்ந்ததில் ஐவர் நசியுண்டு சாவு !

You are currently viewing மரம் வேருடன் பாறி பேரூந்தின் மீது வீழ்ந்ததில் ஐவர் நசியுண்டு சாவு !

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று இன்று (06.10.2023) வெள்ளிக்கிழமை காலை கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்று வட்டத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது அங்கு வீதியோரம் நின்ற பாரிய மரம் ஒன்று எதிர்பாராத விதமாக வேருடன் பாறி பேருந்தின் நடுப்பகுதியில் பலமாக வீழ்ந்து பேரூந்து நசிக்கப்பட்டதில் பேரூந்தில் பயணித்த ஐவர் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இருபதுக்கும் மேற்பட்டோர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உயிர் இழந்தவர்கள் ஐவரும் ஆண்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பேரூந்தில் பாடசாலை மாணவர்களும் பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இருவர் உடனடியாக அடையாளம் காணப்பட்டபோதும் மூவர் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மரம் வேருடன் பாறி பேரூந்தின் மீது வீழ்ந்ததில் ஐவர் நசியுண்டு சாவு ! 1

மரம் வேருடன் பாறி பேரூந்தின் மீது வீழ்ந்ததில் ஐவர் நசியுண்டு சாவு ! 2

மரம் வேருடன் பாறி பேரூந்தின் மீது வீழ்ந்ததில் ஐவர் நசியுண்டு சாவு ! 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments