தமிழ்ப் பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த அடாவடிப் பிக்கு !

You are currently viewing தமிழ்ப் பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த அடாவடிப் பிக்கு !

மட்டக்களப்பு மயிலந்தமடு மற்றும் மாதவனை தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு நீதிகோரி  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ( 06.10.2023) வெள்ளிக்கிழமை சிறீலங்கா நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இனவாதத்துடன் ஈடுபட்டு வரும் பிக்குவான அம்பிட்டிய
சுமனரத்ன என்ற அடாவடிப் பிக்கு

மயிலந்தமடு மற்றும் மாதவனையை ஆக்கிரமித்துள்ள சிங்களவர்களையும், திருகோணமலையில் பெரியகுளம் தமிழர் காணியை அடாத்தாக ஆக்கிரமித்து அங்கு சட்டவிரோதமாக விகாரை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு பல அடாவடிச் செயல்களைச் செய்து வரும் இனவாத பிக்குவையும் அழைத்து வந்து

விளக்குமாறு  மற்றும் தும்புத்தடி என்பவற்றைக் கையில் ஏந்தியபடி மட்டக்களப்பு நகரின் மணிக்கூட்டுக் கோபுரப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்-சாணக்கியனுக்கு எதிராகக் கோசங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன்போது அவர் கையில் வைத்திருந்த இந்தத் தும்புத்தடியும் விளக்குமாறும் முறியும் வரை சாணக்கியனுக்கு அடிப்பேன் என இனவாதமாகக் கோசமிட்டார்.

இந் நிலையில் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்ப் பெண்  ஊடகவியலாளருக்கு
அடாவடி பிக்கு அநாகரீகமான வார்த்தைகளால் அச்சுறுத்தல் விடுத்து  நடந்து கொண்ட காட்சி ..

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments