மருதனார்மடத்திலும் வன்முறைக் கும்பல் அடாவடி!

You are currently viewing மருதனார்மடத்திலும் வன்முறைக் கும்பல் அடாவடி!

மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ளது. வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது என்று சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக சிறீலங்கா காவல்த்துறை. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக இப்படியான வன்முறைக்கும்பலின் செயற்பாடு அதிகரித்துள்ளமை தமிழ்மக்களை விசனத்துக்குள்ளாகியுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments