மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் போராட்டம்!

You are currently viewing மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் போராட்டம்!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் தொழில்நடவடிக்கை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சந்தைத் தொகுதியில் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அங்கு சென்ற சுன்னாகம் பொலிசார் மற்றும் ராணுவத்தினர் சந்தை வியாபாரிகளை அழைத்து வலி தெற்கு பிரதேச சபை தலைவரோடு பேச்சுவார்த்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றுகூடி ஒரு முடிவை அறிவிப்பதாக சுன்னாகம் பிரதேச சபையின் தவிசாளர் தர்ஷன் தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள