செஞ்சோலை படுகொலை நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணத்தில் !

You are currently viewing செஞ்சோலை படுகொலை நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணத்தில் !

முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பாடசாலை மாணவிகளின் 17,ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ்தேசிய மக்கள் முன்னணியால் இன்று யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

இன்று [14.08.2023]திங்கட்கிழமை பிற்பகல்-05,மணிக்கு யாழ்.கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக முன்னணியின்

மகளிர் அணித் தலைவி வாசுகி- சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நிகழ்வில் முன்னதாக உயிரிழந்த மாணவிகளிள் உருவப்படம் பொறிக்கப்பட்ட பனர் முன்பாக அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

தொடர்ந்து நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன உரைகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா-கஜேந்திரன், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர்,கட்சியின் முக்கியஸ்தர் பொன் மாஸ்டர்,ஆகியோர் நிகழ்த்தினர்

இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்கள் மக்கள் எனப்
பலரும் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக நினைவு வணக்கம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments