முல்லைத்தீவில் இராணுவப் புலனாய்வு அதிகாரி கஞ்சாவுடன் கைது!

You are currently viewing முல்லைத்தீவில் இராணுவப் புலனாய்வு அதிகாரி கஞ்சாவுடன் கைது!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு சிறீலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, இவர்களிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை சிறீலங்கா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன்ட் மேஜரையும், உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் நிறுத்தியபோது இருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு சிறீலங்கா பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை, சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments