முல்லைத்தீவு பகுதியில் பிறந்த குழந்தையை குழிதோண்டி புதைத்த தாய்!

You are currently viewing முல்லைத்தீவு பகுதியில் பிறந்த குழந்தையை குழிதோண்டி புதைத்த தாய்!

breaking

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தையை கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.

குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம் புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்ட அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.

மிக ஒழுக்கம் மிக்க சமூகமாக இருந்த வன்னி மண்ணின் விடுதலைப்புலிகளின் காலத்துக்கு (2009) பின்னர் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேடான சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருவதோடு பாலியல் வன்புணர்வு, தவறான உறவுகள் என சமூகத்தின் போக்கு மாறிவருகிறது.

எனவே மக்கள் விழிப்படைந்து எமது சமூகத்தின் மதிப்பை பாதுகாக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments