முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் மாயம்!

You are currently viewing முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் மாயம்!

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்கச்சென்ற இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினருடன் கடலில் குழித்துக்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குடும்பமாக ஆண், பெண்கள் என சுமார் 15 பேர் வரையில் வாகனத்தில் சென்று குறித்த கடலில் குளித்துள்ளதை கரையில் உள்ள ஏனையவர்கள் அவதானித்துள்ளனர்.

இதன்போதே ஒருவர் கரையில் இருந்து சற்றுதொலைவில் சென்ற நிலையில் அவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.

இதனையடுத்து அங்குள்ளவர்களும் மீனவர்களும் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் கடல் அலை தேடும் நடவடிக்கையில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments