முல்லை முள்ளியவளையில் சட்டவிரோத விக்டர் குழு; 21 வயது இளைஞன் கைது!

You are currently viewing முல்லை முள்ளியவளையில் சட்டவிரோத விக்டர் குழு; 21 வயது இளைஞன் கைது!

முல்லைத்தீவு பிரதேசத்தில் இயங்கி வந்த விக்டர் குழுவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த விக்டர் குழு தொடர்பில் பொலிசார் கூடுதல் அவதானம் செலுத்தியிருந்தனர்.

மக்கள் மத்தியில் காணப்படும் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் செயற்பட்டுவந்த குறித்த குழுவின் பிரபல உறுப்பினர் ஒருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு தண்ணீருற்று முல்லியவலை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான குறித்த சந்தேக நபர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்..see more

பகிர்ந்துகொள்ள