முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் – கஞ்சி வழங்கி அனுசரிப்பு! 

You are currently viewing முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் – கஞ்சி வழங்கி அனுசரிப்பு! 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அருகில் இன்று இடம்பெற்றது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது 2009ஆம் ஆண்டு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவையும் நிலையில் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ளது.

இன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவுப்படுத்தும் முகமாக அரிசி மற்றும் உப்பு போடப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த இடத்திற்கு பாதுகாப்பு கடமைகளுக்கு வருகை தந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வாளர்களுக்கு முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை வளாகத்திற்கு அருகில் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டது. மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - கஞ்சி வழங்கி அனுசரிப்பு!  1
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - கஞ்சி வழங்கி அனுசரிப்பு!  2
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - கஞ்சி வழங்கி அனுசரிப்பு!  3
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - கஞ்சி வழங்கி அனுசரிப்பு!  4
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - கஞ்சி வழங்கி அனுசரிப்பு!  5
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - கஞ்சி வழங்கி அனுசரிப்பு!  6
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments