மெதுவெதுப்பி விற்ற சிறுவனும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது!

You are currently viewing மெதுவெதுப்பி விற்ற சிறுவனும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது!

வெதுப்பகத்தில் ”மெதுவெதுப்பி ”விற்ற ஒரு சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கோவிந்தன் கருணாகரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இந்த விவகாரத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மட்டக்களப்பில் கடந்த வாரம் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் மட்டக்களப்பில் உள்ள வெதுப்பகத்தில் வேலை செய்கின்றார். அவர் கடந்த வாரம் கேக் ஒன்றை விற்றுள்ளார். அந்த கேக்கை வாங்கியவர் அதனை கொண்டுபோய் அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என பெயர் எழுதியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் குறிப்பிட்ட வெதுப்பகத்துக்கு சென்று பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்பு காணொளியை ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த சிறுவன் மெதுவெதுப்பியை மாத்திரம்தான் கொடுத்துள்ளார். அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதிக்கொடுக்கவில்லை. ஆனால், அந்த வெதுப்பகத்தில் வேலைசெய்த குற்றத்துக்காக பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ்  காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படியே செல்லுமாக இருந்தால் இந்த நாடு அழிந்து போகும் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments