புலோப்பளை விபத்தில் இளைஞன் பலி- இருவர் காயம்!

You are currently viewing புலோப்பளை விபத்தில் இளைஞன் பலி- இருவர் காயம்!

கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று முன்நாள் பிற்பகல் பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குணம் கணேசன் (வயது 20) என்பவரே பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் பளையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments