யாழில் அத்துமீறும் சமூகக்குற்றச்செயல்!

You are currently viewing யாழில் அத்துமீறும் சமூகக்குற்றச்செயல்!

யாழ். நகரில் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் வேலை முடித்து வீடு திரும்பிய போது பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய கும்பல் அவரை வழிமறித்து தடுத்துள்ளது.

அவர்களிடமிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு விட்டு குறித்த பெண் வீடொன்றுக்குள் சென்ற போதே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்று மானிப்பாய் சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் சிறீலங்கா காவல்த்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments