யாழில் ஊடகவியலாளர் மிது காவல்துறையினர் வழக்கு பதிவு-ஊடக அடக்குமுறை!

You are currently viewing யாழில் ஊடகவியலாளர் மிது காவல்துறையினர் வழக்கு பதிவு-ஊடக அடக்குமுறை!

வடமராட்சி மாலுசந்திப் பகுதியில் நடக்கும் தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செய்தி கேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறித்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கடுமையான சோதனை நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டமை தொடர்பில் செய்தி சேகரித்தமை தொடர்பில் தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த ஊடவியலாளர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து சம்மந்தப்பட்ட ஊடகவியலாளரான ம.மதினாவன் கருத்து தெரிவிக்கையில்:-
மாலுசந்தி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழரசு கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 7 வேட்பாளர்களின் பிரச்சார கூட்டம் தற்பேது நடைபெற்று வருகின்றது.

அங்கு நான் செய்தி சேகரிப்பதற்கான சென்றிருந்தேன்.
அங்கு வழமைக்கு மாறாக அதிகரித்த சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். என்னையும் வழிமறித்து சோதனை செய்தனர்.
உனது உடமைகளையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனை நடவடிக்கைகளை நான் புகைப்படம் எடுத்திருந்தேன்.

இதன் போது என்னுடன் முரண்டபட்டுக் கொண்ட காவல்துறை தமது கடமைகளுக்கு நான் இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட 3 குற்றங்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது காவல்துறையினர் கைக்கவசங்கள் எதனையும் அணியாத வாறே என்னையும் எனது உடமை மற்றும் பொது மக்களையும் சோதனை செய்திருந்தனர் என்றும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள