யாழில் காணமல்போன குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட நிலை!

You are currently viewing யாழில் காணமல்போன குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட நிலை!

யாழில் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குளத்திலிருந்து நேற்று பிற்பகல் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சிறீலங்கா காவல்த்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இப்போது இனம்தெரியாமல் எமது உறவுகள் சாகடிக்கப்படுவது தொடர்கதையாக மாறியுள்ளது இதற்கு பின்னால் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பே பின்புலமாக இருப்பதாக இன உணர்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments