யாழில் கிணற்றில் இருந்து இரு பிள்ளைகளின் தந்தையின் உடலம்!

You are currently viewing யாழில் கிணற்றில் இருந்து இரு பிள்ளைகளின்  தந்தையின் உடலம்!

யாழில் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணற்றில் விழுந்து குடும்பஸ்தொருவர் உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

தோட்டத்திற்கு வந்த குறித்த இளைஞன் நீர் இறைப்பதற்குரிய ஆயத்த வேலைகளை மேற்கொண்டிருந்தார். இதன்போது கிணற்றுக்குள் மண்வெட்டி தவறுதலாக விழுந்துள்ளது.

அதனை எடுப்பதற்காக எத்தனித்த போதே குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் நிலாவரைக் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சகாதேவன் தர்மசீலன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள