யாழில் தேசத்தின் புயல்களை நினைவிற்கொண்டார்கள்!

You are currently viewing யாழில் தேசத்தின் புயல்களை நினைவிற்கொண்டார்கள்!

கடும் இராணுவப் பிரசன்னம், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது கரும்புலிகள் தினமான நேற்றுக் காலை முதல் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவம்,  விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு – ரோந்து நடவடிக்கைகளுடன் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்ந்துகொள்ள