யாழில் தனிமையில் வசித்து வந்த பெண்ணின் வீடு உடைத்து கொள்ளை!

You are currently viewing யாழில் தனிமையில் வசித்து வந்த பெண்ணின் வீடு உடைத்து கொள்ளை!

யாழ்.மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் சுமார் 9 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக சாவகச்சோி சிறீலங்கா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீசாலை வடக்கு – பூதவராயர் கோவிலை அண்மித்த பகுதியில் தனிமையில் வாழும் பெண் ஒருவர் பாதுகாப்பு கருதி உறவினர் ஒருவரின் வீட்டில் இரவில் உறங்குவதற்கு சென்றுள்ளார்.

அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் வீட்டை உடைத்து உட்புகுந்து சுமார் 9 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளனர்.

அத்துடன், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராவின் சேமிப்பு தொகுதியும் துாக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.   

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments