வர்த்தகர் உட்ப்பட வடக்கில் இரு விபத்துகளில் இருவர் பலி!

You are currently viewing வர்த்தகர் உட்ப்பட வடக்கில் இரு விபத்துகளில் இருவர் பலி!

யாழில்  நோயாளர்காவுவண்டி மோதியதில் படுகாயமடைந்த வர்த்தகரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ்  தர்மதாஸ் என்ற 54 வயதான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்தவர்,

வர்த்த நிலையத்தை மூடி விட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் அம்பூலன்ஸ் வண்டியுடன்  மோதி விபத்துக்குள்ளானார்.

இந்நிலையில் படுகாயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவமானது நேற்று(17.02.2024) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 வயதுடைய விநாயகம் என அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவரும் குறித்த நபர் நேற்று(17) மாலை கள்ளினை இறக்கி தவறனைக்கு கொண்டு சென்றுகொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் அவர் பயணித்த உந்துருளி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments