வவுனியாவில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது !

You are currently viewing வவுனியாவில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது !

வவுனியா – தம்பனைச்சோலை பகுதியில் 80,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை சிறீலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நேற்று (18.02.2024) வவுனியா சிறீலங்கா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக சிறீலங்கா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா சிறீலங்கா தலைமை பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில்  தம்பனைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் விசேட சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது 80,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments