யாழில். பாடசாலை விளையாட்டு போட்டி தொடர்பில் சிறீலங்கா காவற்துறை விசாரணை!

You are currently viewing யாழில். பாடசாலை விளையாட்டு போட்டி தொடர்பில் சிறீலங்கா காவற்துறை விசாரணை!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் சிறீலங்கா காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவை தொடர்பிலான புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.

அது தொடர்பில்  விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே சிறீலங்கா காவற்துறையினர் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்வற்றை எடுத்தனர்.

அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் சிறீலங்கா காவற்துறை நிலையம் சென்று இருந்த நிலையில், சிறீலங்கா காவற்துறை அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்து இருந்தனர்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில். பாடசாலை விளையாட்டு போட்டி தொடர்பில் சிறீலங்கா காவற்துறை விசாரணை! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments