மட்டக்களப்பில் பேருந்து மோதி பெண் பலி!

You are currently viewing மட்டக்களப்பில்  பேருந்து மோதி பெண் பலி!

 

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (23) இரவு இச் சம்பவம் இடம் பெற்ற நிலையில்,  பேருந்து  சாரதியை கைது செய்துள்ளதாகவும், உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் கொக்குவில் சிறீலங்கா காவற்துறையினர்   தெரிவித்தனர்.

குறித்த தனியார் சொகுசு பேருந்து  சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து பயணித்த போது கொழும்பு வீதியான சத்துருக் கொண்டான் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதியதை அடுத்து சம்பவ இடத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காணப்படாத நிலையில்,  சடலத்தை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பேருந்து  சாரதியை கைது செய்துள்ளதோடு, குறித்த பெண் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் கொக்குவில் சிறீலங்கா காவற்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு காவற்துறையினர்பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments