யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவு!

You are currently viewing யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவு!

சுன்னாகம் சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை  நேற்றைய தினம் பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments