யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்! 1

யாழ்ப்பாணம் – நல்லிணக்கபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 20.10.2023 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் – கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த தேவராசா சூசைதாசன் 46 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் கடந்த 20.10.2023 அன்று மேற்படி முகவரியில் உள்ள அவரது வீட்டில் இருந்த வர்த்தக விடயமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் சென்றதில் இருந்து 5ஆவது நாள் அவரது கைப்பேசி இயங்காததன் காரணத்தினால் அவரது மனைவி இது குறித்து காங்கேசன்துறை சிறீலங்கா பொலிஸ் நிலையத்தில் கடந்த 2024.02.01 ஆம் திகதி அன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

எனினும் இதுவரை காணாமல் போன நபர் கண்டுப்பிடிக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் யுத்த காலத்தில் குறித்த நபர் கண்ணிவெடியில் சிக்கியதில் அவரது கால் பறிபோயுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் 076 – 6348367, 074 – 0910152 மற்றும் 076 – 3934822 ஆகிய இலக்கங்களில் ஏதாவது ஒரு இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments