யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பாடசாலை மாணவன் பலி!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பாடசாலை மாணவன் பலி!

யாழ்ப்பாணத்தில், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது-11) என்ற யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி காய்ச்சல் காரணமாக அவர் பனடோல் உட்கொண்டு விட்டு இருந்துள்ளார். எனினும் 19ஆம் திகதி மீண்டும் வயிற்றோட்டம், வாந்தி ஏற்பட்டு மாணவன் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதனால் அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments