யாழ்ப்பாணத்தில் தேர்த் திருவிழா நடத்திய ஆலய நிர்வாகிகள் கைது!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் தேர்த் திருவிழா நடத்திய ஆலய நிர்வாகிகள் கைது!

யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் சுகாதார கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திரு விழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலய தலைவர், செயலாளர் ஆகியாேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கான ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளைவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது.

வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழா இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments