யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

You are currently viewing யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆராதனை நடத்திய சுவிஸ் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த ஏப்ரல் முதலாம், மூன்றாம் திகதிகளில் முதல்கட்டப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது மானிப்பாயைச் சேர்ந்த போதகர் ஒருவர் உள்பட 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாம்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 8 பேரில் நால்வரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள