யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை ! மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது !

You are currently viewing யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை ! மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது !

யாழ்ப்பாணம் – கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் சிறீலங்கா காவற்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (21-01-2023) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் சிறீலங்கா காவற்துறையினர், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி, மனைவியில் தந்தை உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments