யாழ் சாவகச்சேரியில் வீடுபுகுந்து தாக்குதல் பொருட்கள் சேதம்!

You are currently viewing யாழ் சாவகச்சேரியில் வீடுபுகுந்து தாக்குதல் பொருட்கள் சேதம்!

யாழ்.சாவகச்சோி- கல்வயல் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை 3 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

கல்வயல் கிராமசேவகர் அலுவலகம் இருக்கும் வீட்டின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கம்பிகள், தடிகள், வாள்கள் சகிதம் வந்த கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. 

தாக்குதலில் வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் அடித்து துவம்சம் செய்யப்பட்டிருப்பதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை குறித்த சம்பவம் தனிப்பட்ட முரண்பாட்டினாலேயே நடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ள சாவகச்சோி பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை 

கெருடாவில் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்

பகிர்ந்துகொள்ள