யாழ்.நகரில் வீடொன்று காவல்த்துறையால் அதிரடி முற்றுகை !

You are currently viewing யாழ்.நகரில் வீடொன்று காவல்த்துறையால் அதிரடி முற்றுகை !

யாழ்.நகரில் நாவலர் வீதி பகுதியில் இடம்பெற்றுவந்த சமூக சீரழிவு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ்.காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.

குறித்த வீட்டை முற்றுகையிட்ட காவல்த்துறையினர் குறித்த பெண்களை கைது செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே தனிமைப்படுத்த காவல்த்துறையினர் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் காவல்த்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டை நேற்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த காவல்த்துறையினர், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினார்.

அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரையும் காவல்த்துறையினர் விசாரணை நடத்தினர்.அதன்போது அங்கிருந்தவர்கள் விசாரணைகளின் போது தொடர்ந்து முன்னுக்கு பின் முராண தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதனால் இன்றைய நாள் இருவரும் குறித்த வீட்டிலையே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாளைய நாள் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக காவல்த்துறை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள