யாழ். நகரில் 8.5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

You are currently viewing யாழ். நகரில் 8.5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

8.5 கிலோ கஞ்சாவுடன் யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு சிறீலங்கா காவற்துறையினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்கு கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு சிறீலங்கா காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை யடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான காவற்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு சிறீலங்கா காவற்துறையின் பிரிவில் செயற்படும் காவற்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான போலீஸ் அணியினரால் குறித்த கைது சம்பவ இடம் பெற்றுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments