யாழ்.மாவட்டத்தில் 63 பேர் உட்பட வடக்கில் 87 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

You are currently viewing யாழ்.மாவட்டத்தில் 63 பேர் உட்பட வடக்கில் 87 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 63 பேர் உட்பட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 87 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 869 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்ப்பாணத்தின் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட விபரம் வருமாறு

யாழ்.மாவட்டத்தில் 24 பேருக்கு தொற்று

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஐந்து பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஐந்து பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர்

பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பேர்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர்,

வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

மன்னார் மாவட்டத்தில் 09 பேர்

மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்

வவுனியா மாவட்டத்தில் 03 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பெரிய காடு தனிமைப்படுத்தல் நிலையத்திலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை,

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தின் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 39 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments