யாழ் வல்வெட்டியில் 50 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மீட்பு!

You are currently viewing யாழ் வல்வெட்டியில் 50 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் 50 கிலோ கிராம் எடைக்கும் அதிகமான கேரளா கஞ்சா நேற்றிரவு(29)  கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடாத்தப்பட்ட சோதனையின்போது கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த பொதி எவ்வாறு வந்திருக்கும் என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments