ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன இணக்கம்!

You are currently viewing ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன இணக்கம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை

அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சார்பாக ஐ.நா பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.நா பொதுச்செயலாளர் இலங்கை மக்களுடன் ஒற்றுமையுடன் இணைந்துள்ளார். அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து வன்முறைச் செயல்களையும் பொதுச்செயலாளர் கண்டிப்பதோடு, அமைதியைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும், பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments