ரஷ்ய ஜனாதிபதி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

You are currently viewing ரஷ்ய ஜனாதிபதி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஒற்றை எதிரி கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் வேலைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களின் வருடாந்திர சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், Burevestnik என்ற அணுசக்தி திறன் கொண்ட பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் க்ருஸ் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

மேலும் சர்மாட் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வருங்காலத்தின் தலைசிறந்த அணு ஆயுதமாக இருக்கும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த சரியான திட்டம் யாருக்கும் கிடையாது, அப்படி யாருக்கேனும் அந்த எண்ணம் இருந்தால் ரஷ்யாவின் பல ஏவுகணைகள் எதிரிகளின் வானில் பாயும்.

அதில், ஒற்றை எதிரி கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது என புடின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா அணு ஆயுத சோதனையை தடை செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்கவில்லை, ஆனால் ரஷ்யா அதை ஏற்று 1990ல் இருந்து அணு ஆயுத சோதனை எதையும் செய்யவில்லை.

தேவைப்பட்டால் நாடாளுமன்ற ஒப்புதலுடன் அணு ஆயுத தடைக்கு வழங்கிய ஒப்புதலில் இருந்து ரஷ்யா வெளியேறும் எனவும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments