வடக்கிற்கு கடத்தப்படவிருந்த 1,000 கிலோ மஞ்சள் பறிமுதல்!

You are currently viewing வடக்கிற்கு கடத்தப்படவிருந்த 1,000 கிலோ மஞ்சள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 1,000 கிலோ மஞ்சள் கட்டி அடங்கிய 40 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டு படகுடன் மெரைன் பொலிஸார் இன்று(26) பறிமுதல் செய்துள்ளனர்.
பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மண்டபம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பாம்பன் வடக்கு கடற்கரையில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாம்பன் கலங்கரை விளக்கம் அருகே நடுக்கடலில் உரிய பதிவு எண் இல்லாத நாட்டு படகு ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

இதனை கண்ட பொலிசார் படகில் ஏறி சோதனை செய்தனர். அப்போது படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்தது நாட்டு படகை பாம்பன் வடக்கு கடற்கரைக்கு எடுத்து வந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், நாட்டுபடகு தூத்துக்குடியை சேர்ந்தது எனவும் படகில் உள்ள ஆதார் அட்டை பாம்பன் சேதுபதி நகரை சேர்ந்தவர் உடையது எனவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள