வடக்கில் தொல்லியல் திணைக்களத்துக்கு நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் நியமனம்!

You are currently viewing வடக்கில் தொல்லியல் திணைக்களத்துக்கு நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் நியமனம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருளியல் திணைக்களத்தில் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தொல்பொருளியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் கீழ் பணியாற்ற 30 வரையான சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தொல்பொருள் மையங்களில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாது இருக்கும் போது சிங்களவர்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை என வடக்கு கிழக்கெங்கும் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இவ்வாறு வடபகுதியை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments