வடக்கில் நேற்று 134 பேருக்கு தொற்று! – யாழ்ப்பாணத்தில் மட்டும் 96 பேர்!!

You are currently viewing வடக்கில் நேற்று 134 பேருக்கு தொற்று! – யாழ்ப்பாணத்தில் மட்டும் 96 பேர்!!

வடக்கு மாகாணத்தில் நேற்று யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா மருத்தவமனை ஆய்வு கூடங்களில் 951 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது 134 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 96 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ரீதியாக தெல்லிப்பழையில் 19 பேரும், சண்டிலிப்பாயில் 27 பேரும், யாழ். மாநகரில் 45 பேரும், வேலணையில் 3 பேரும், யாழ். போதனா மருத்துவமனை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளில் தலா ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேரும், மன்னார் மாவட்டத்தில் 14 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 08 பேரும், வவுனியா மாவட்டத்தில் 10 பேரும் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments