வடக்கில் மேலும் 37 பேருக்கு கொரோனா!

You are currently viewing வடக்கில் மேலும் 37 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 778 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். மாவட்டத்தில் 36 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கற்கும் 6 மாணவர்களுக்கு கொரோனாத தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் தரம் 9 கற்பவர்கள் என்றும், இந்த மாணவர்களுடன் தொடர்பைப் பேணியோரைத் தனிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 14 சிறீலங்கா காவல்த்துறை உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட சிறீலங்கா காவல்த்துறைக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 14 உத்தியோகத்தர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments